Saturday, April 25, 2009

Symbol of Good Character



மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் நடந்தது. சினிமாவில் இருந்து ரிட்டையர்ட் ஆகி, "டிவி'யில் "திறமை' காட்டி வரும் குயிலி, சுகன்யா, தேவயானி உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டனர்.நடிகை சுகன்யா, பார்ப்பதற்கு 20 வயது பெண் போல் மார்டன் ட்ரெஸ்சில், கழுத்திலும் கைகளிலும் நகைகள் எதுவும் அணியாமல், சிக்கென்று வந்திருந்தார். அனைவரின் பார்வையும் அவர் மீதே விழுந்தது.நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் ஒருவருடன் ஒருவர் பேசி, அஞ்சலி நிகழ்ச்சி என்பதைக் கூட பொருட்படுத்தாமல், சிரித்து அரட்டை அடித்துக்கொண்டிருக்க, சுகன்யாவோ யாருடனும் பேசாமல் ஒதுங்கியே இருந்தார். "ஏன் உம்மென்று இருக்கிறீர்கள்?' என்று கேட்ட போது, போட்டோகிராபர்கள் பக்கம் லேசாக திரும்பிவிட்டு, "அஞ்சலி நிகழ்ச்சி என்பதால் சிரித்து பேசக்கூடாதில்லையா' என்று கொஞ்சலாக தெரிவித்தார்.
"கேமராவைப் பார்த்தால் சுகன்யாவுக்கு அவ்வளவு பயமா?' என சிரித்தார் அருகில் இருந்த சீனியர் நிருபர்.

No comments:

Post a Comment