Thursday, April 16, 2009

Sukanya -As The God(Adhi Parasakthi)



ராஜ் டிவியில் நடிகை சுகன்யா ஆதிபராசக்தியாக நடிக்கும் "ஆதிபராசக்தி" புராணத் தொடர் வெள்ளி தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.அன்னை எந்தெந்த திருத்தலங்களில் எத்தனை விதமான திருவிளையாடல் புரிந்திருக்கிறாள் என்பதை காட்சிப்படுத்தும் தொடர் இது.காஞ்சி காமாட்சியாக இருந்து குடும்ப வாழ்வின் பெருமையை விளக்கும் அவளே மதுரை மீனாட்சியாக இருந்து வீரத்தை விளக்குகிறாள். கருணையின் வடிவான அவளே காளியாகவும் இருந்து அசுரவதம் புரிகிறாள். அவளால் எத்தனையோ புலவர்கள் வாக்குவளம் பெற்று பல அரிய நூல்கள் தந்திருக்கிறார்கள்.

மாங்காட்டில் காமாட்சியாக இருக்கும் அன்னை, திருவேற்காட்டில் கருமாரியாக வந்து காட்சி தருகிறாள். பாம்பாக இருக்கும் அவளே, வேம்பாகவும் இருந்து அருள் புரிகிறாள். இந்த அன்னை இமயம் முதல் குமரி வரை எந்தெந்த திருத்தலங்களில் பக்தர்களுக்கு எவ்விதமாய் காட்சியளித்தாள் என்பதை தொடரும் காட்சிகளில் காணலாம்.ஆதிபராசக்தியாக நடிகை சுகன்யா நடிக்கிறார். மாஸ்டர் ஸ்ரீதர், காளிதாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் உண்டு.இத்தொடருக்கு கதைவசனம் கே.பி.அறிவானந்தம் எழுதுகிறார்.ராஜேஷ் வைத்யா இசை அனைக்கிறார்.கோபி பீம்சிங் இயக்கத்தில் ஆதிபராசக்தி உருவாகியுள்

No comments:

Post a Comment